என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    டிஎன்பிஎல் கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வெற்றி பெற 121 ரன்கள் தேவை
    X

    டிஎன்பிஎல் கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வெற்றி பெற 121 ரன்கள் தேவை

    • டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர்.
    • சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தரப்பில் ஹரிஷ் குமார், ரகில் ஷா தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

    டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் 5-வது லீக் ஆட்டம் கோவையில் இன்று இரவு நடக்கிறது. இதில் ஜெகதீசன் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ், சாய்கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த திருப்பூர் அணிக்கு, சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடி அளித்தனர். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழக்க, ராதாகிருஷ்ணன் 36 ரன்களும், விஜய் சங்கர் 28 ரன்கள், ராஜேந்திரன் 26 ரன்களும் (நாட்அவுட்) எடுத்து ஆறுதல் அளித்தனர். இதனால் அந்த அணி 20 ஓவர் முடிவில், 7 விக்கெட் இழப்பிற்கு 120 ரன்கள் எடுத்தது.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தரப்பில் ஹரிஷ் குமார், ரகில் ஷா தலா 2 விக்கெட் கைப்பற்றினர். இதையடுத்து 121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி களமிறங்குகிறது.

    Next Story
    ×