search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    அனிருத் அபாரம்... சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை வீழ்த்தியது மதுரை பாந்தர்ஸ்
    X

    அரை சதம் அடித்த மதுரை அணி வீரர் அனிருத் 

    அனிருத் அபாரம்... சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை வீழ்த்தியது மதுரை பாந்தர்ஸ்

    • முதலில் ஆடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் ஹரிஷ் குமார், சசி தேவ் சிறப்பாக ஆடினர்.
    • மதுரை அணி 11 பந்துகள் மீதமிருந்த நிலையில் 6 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டியது.

    டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-சீசம் மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி துவக்கத்தில் விக்கெட்டுகளை வரிசையாக இழந்து திணறியது.

    51 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில், ஆல் ரவுண்டர் ஹரிஷ் குமார், சசி தேவ் ஜோடி சிறப்பாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இதனால் 20 ஓவர் முடிவில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சசி தேவ் 58 ரன்கள் விளாசினார். ஹரிஷ் குமார் 39 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதையடுத்து 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மதுரை அணி, 11 பந்துகள் மீதமிருந்த நிலையில் 6 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டியது. இதனால் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அனிருத் 58 ரன்கள் (நாட் அவுட்) குவித்தார். அருண் கார்த்திக் 31 ரன்கள், ராஜ்குமார் 19 ரன்கள் எடுத்தனர்.

    Next Story
    ×