டிஎன்பிஎல்: திருப்பூர் வெற்றிபெற 161 ரன்களை இலக்காக நிர்ணயித்தது கோவை

டிஎன்பிஎல் தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. முதலில் ஆடிய கோவை 160 ரன்களை எடுத்துள்ளது.
டிஎன்பிஎல்: திருப்பூர் வெற்றிபெற 161 ரன்களை இலக்காக நிர்ணயித்தது கோவை
Published on

சேலம்:

டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் 8-வது சீசன் நேற்று சேலத்தில் தொடங்கியது. இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. முதலில் நடைபெற்ற ஆட்டத்தில் சேப்பாக் அணியை நெல்லை அணி வீழ்த்தியது.

இந்நிலையில், இரவு 7.15 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ்-திருப்பூ தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற கோவை அணி பேட்டிங் தேர்வு செய்தார்.

அதன்படி, கோவை அணி முதலில் களமிறங்கியது. கேப்டன் ஷாருக் கான் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 55 ரன்னில் அவுட்டானார். சச்சின் 30 ரன்னிலும், சுஜய் 27 ரன்னிலும் அவுட்டாகினர்.

இறுதியில், கோவை அணி 7 விக்கெட் இழப்புக்கு 160 ரன்களை எடுத்துள்ளது. இதையடுத்து, 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருப்பூர் அணி களமிறங்குகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com