search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    அஸ்வின் என்னை விரும்பியது பள்ளி முழுவதும் தெரியும்- காதல் அனுபவத்தை பகிர்ந்த மனைவி பிரீத்தி
    X

    அஸ்வின் என்னை விரும்பியது பள்ளி முழுவதும் தெரியும்- காதல் அனுபவத்தை பகிர்ந்த மனைவி பிரீத்தி

    • ஒருமுறை அவர் என்னை ஒரு கிரிக்கெட் மைதானத்துக்கு அழைத்து சென்றார்.
    • நான் சென்னை சூப்பர் கிங்ஸ் கணக்கை கையாளும் போது மீண்டும் அவரை சந்தித்தேன்.

    சென்னை:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின். அவர் தற்போது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தான் அணியில் விளையாடி வருகிறார்.

    அஸ்வின் தனது தோழியான பிரீத்தியை காதலித்து கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

    இதற்கிடையே அஸ்வின் மனைவி பிரீத்தி தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசினார். இதை சானியா மிர்சா, வேதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தொகுத்து வழங்கினர். அப்போது பிரீத்தியிடம், காதல் வாழ்க்கை பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது:-

    நானும், அஸ்வினும் ஒரே பள்ளியில் படித்தோம். அன்றிலிருந்து ஒருவரையொருவர் அறிந்திருக்கிறோம். அதன்பின் நாங்கள் வளர்ந்து மீண்டும் பெரியவர்களாக சந்தித்தோம். நான் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்தேன். அஸ்வினுக்கு என் மீது ஒரு பெரிய ஈர்ப்பு இருந்தது.

    அது முழு பள்ளிக்கும் தெரியும். அவர் கிரிக்கெட்டை தொடர பள்ளிகளை மாற்றினார். அதே வேளையில் நாங்கள் தொடர்பில் இருந்தோம். பிறந்த நாள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் சந்தித்தோம்.

    நான் சென்னை சூப்பர் கிங்ஸ் கணக்கை கையாளும் போது மீண்டும் அவரை சந்தித்தேன். திடீரென்று அவரை ஆறு அடி உயரத்தில் பார்த்தேன்.

    ஒருமுறை அவர் என்னை ஒரு கிரிக்கெட் மைதானத்துக்கு அழைத்து சென்றார். அவர் எதையும் நேரடியாக சொல்பவர். அவர் என்னிடம், என் வாழ்நாள் முழுவதும் நான் உன்னை மிகவும் விரும்பினேன். அது 10 ஆண்டுகளாக மாறவில்லை என்றார்.

    Next Story
    ×