என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட்
சச்சின் சாதனையையும் விட்டு வைக்காத ரிஷப் பண்ட்
- டோனியின் 17 ஆண்டு சாதனையை ரிஷப் பண்ட் தகர்த்துள்ளார்.
- இளம் வயதில் 100 சிக்சர் அடித்தவர்கள் பட்டியலில் 3-வது இடத்தில் சுரேஷ் ரெய்னா உள்ளார்.
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 5-வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 338 ரன்கள் எடுத்தது. அதிரடியாக விளையாடிய ரிஷப் பண்ட் சதம் அடித்து அசத்தினார்.
அவர் 111 பந்தில் 146 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதன் மூலம் அவர் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். டோனியின் 17 ஆண்டு சாதனையை அவர் தகர்த்துள்ளார். இந்திய விக்கெட் கீப்பரில் அதிவேக சதம் அடித்து டோனியின் சாதனையை அவர் முறியடித்துள்ளார்.
மேலும் இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் சாதனையையும் பண்ட் முறியடித்துள்ளார். இளம் வயதில் 100 சிக்சர் அடித்தவர்களில் ரிஷப் பண்ட் முதல் இடத்தை பிடித்துள்ளார். 24 வயதில் அவர் 100 சிக்சர் அடித்துள்ளார். சச்சின் 25 வயதில் 100 சிக்சர் அடித்தார். 3-வது இடத்தில் சுரேஷ் ரெய்னா உள்ளார். அவர் 25 வயதில் 100 சிக்சர் விளாசியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்