என் மலர்
கிரிக்கெட் (Cricket)

பாபர் அசாம் - விராட் கோலி
ரன் குவிக்காததால் விமர்சனம்- விராட் கோலிக்கு பாபர் ஆசம் ஆதரவு
- விராட் கோலிக்கு இந்திய கேப்டன் ரோகித் சர்மா ஆதரவு தெரிவித்தார்.
- இங்கிலாந்து அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் விராட் கோலி 16 ரன்கள் எடுத்தார்.
இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் விராட் கோலி ரன் குவிக்க சிரமப்பட்டு வருவதால் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறார். அதே வேளையில் அவருக்கு இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா ஆதரவு தெரிவித்து உள்ளார்.
இந்த நிலையில் கோலிக்கு பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் கூறும்போது, "இதுவும் கடந்து போகும். வலுவாக இருங்கள் விராட் கோலி" என்று தெரிவித்து உள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் விராட் கோலி 16 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story






