என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட்
முதல் இலக்கை அடைந்து விட்டோம்: அடுத்த இலக்கு இறுதிப்போட்டிதான்- ரோகித்
- ஸ்ரேயாஸ் அய்யர் மன ரீதியாக வலிமையானவர்.
- முகமது சிராஜ் ஒரு தரமான பந்துவீச்சாளர்.
மும்பை:
13-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இலங்கையை 302 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது.
முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 357 ரன்கள் குவித்தது.சுப்மன்கில் 92 ரன்னும், விராட்கோலி 88 ரன்னும், ஸ்ரேயாஸ் அய்யர் 82 ரன்னும் எடுத்தனர்.
பின்னர் விளையாடிய இலங்கை அணி இந்தியாவின் அபார பந்துவீச்சில் 55 ரன்னில் சுருண்டது. இந்திய தரப்பில் முகமது சமி 5 விக்கெட்டும், முகமது சிராஜ் 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.
இந்தியா இதுவரை தான் மோதிய 7 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று முதல் அணியாக அரைஇறுதிக்கு தகுதி பெற்றது. வெற்றி குறித்து இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-
நாங்கள் அதிகாரப்பூர்வமாக அரைஇறுதிக்கு தகுதி பெற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த தொடரில் ஒரு அணியாக நாங்கள் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். சென்னை மைதானத்தில் நாங்கள் முதல் வெற்றியை பெற்றபோது எங்களது இலக்கு முதல் அணியாக அரைஇறுதிக்கு தகுதி பெறுவதுதான் என்பதை கருத்தில் கொண்டு விளையாடினோம்.
7 போட்டியிலும் வெற்றி பெற்று அந்த இலக்கை அடைந்துவிட்டோம். தற்போது அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டியில் வெற்றி பெறுவதுதான் இலக்கு. ஒவ்வொரு வீரர்களும் திறமைகளை வெளிப்படுத்தினர். எந்த ஒரு மைதானத்திலும் 350 ரன்கள் அடித்தால் அது வெற்றிக்கான ரன்னாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
ஸ்ரேயாஸ் அய்யர் மன ரீதியாக வலிமையானவர். இப்போட்டியில் அவருக்கு தெரிந்ததை செய்தார். இதைத்தான் அவரிடமிருந்து நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
முகமது சிராஜ் ஒரு தரமான பந்துவீச்சாளர். அவரிடம் புது பந்தை தந்து இதேபோன்று சிறப்பாக வீசினால் எங்களது அணி வேறு விதமாக தெரியும். அந்த அளவுக்கு அவர் சிறப்பாக பந்து வீசக்கூடியவர். அவர் புதிய பந்தில் நிறைய திறன்களை பெற்றுள்ளார். பந்துவீச்சாளர்களின் செயல்பாட்டை பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. அதை அவர்கள் தொடர்ந்து செய்வார்கள் என்று நம்புகிறேன். அடுத்த ஆட்டத்தில் (5-ந் தேதி, கொல்கத்தா) தென்ஆப்பிரிக்காவுடன் மோத உள்ளோம்.
அவர்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடி வருகிறார்கள். நாங்களும் அப்படி தான் இருக்கிறோம். இதனால் இப்போட்டி சிறந்ததாக இருக்கும். அந்த விளையாட்டை கொல்கத்தா மக்கள் ரசிக்க போகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்