search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் பச்சை நிற ஜெர்சியில் களமிறங்கும் ஆர்சிபி
    X

    ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் பச்சை நிற ஜெர்சியில் களமிறங்கும் ஆர்சிபி

    • வரும் 23-ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் - பெங்களூர் அணிகள் மோதுகிறது.
    • பச்சை நிற ஜெர்சிகள் 100 சதவீதம் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களால் செய்யப்பட்டவை என்றும் தெரிவித்துள்ளது.

    பெங்களூரு:

    16-வது ஐபிஎல் சீசனுக்கான கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு போட்டியும் ரசிகர்களை சீட்டின் நுனிக்கே சென்று அமர்ந்து பார்க்கும் நிலை உள்ளது.

    ஐபிஎல்-லில் இதுவரை சாம்பியன் பட்டம் வெல்லாத ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, இந்த முறை கோப்பையை வெல்ல தீவிரம் காட்டி வருகிறது. அந்த அணியில், அதிரடி வீரர்களான டு பிளஸ்சிஸ், கோலி, மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக் போன்ற வீரர்கள் உள்ளனர்.

    இந்த நிலையில், வரும் 23-ம் தேதி பெங்களூருவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள போட்டியில் பெங்களூரு அணி பச்சை நிற ஜெர்சியில் களமிறங்க உள்ளது.

    இந்த தகவலை அந்த அணி தனது டுவீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. மேலும், அதில், எங்களின் இந்த சிறப்பான பச்சை நிற ஜெர்சிகள் 100 சதவீதம் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களால் செய்யப்பட்டவை என்றும் தெரிவித்துள்ளது.

    2011 முதலே ஆர்சிபி "கோ க்ரீன்" என்ற கலாச்சார முன்னெடுப்பை நிகழ்த்தி வருகிறது. இதன் மூலமாக வருங்கால தலைமுறையினருக்கு தூய்மையான மற்றும் பசுமையான சூழ்நிலையை உருவாக்குவதற்கான விழிப்புணர்வை தருகிறது.

    Next Story
    ×