search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    தற்போது கொஞ்சமாவது முதிர்ச்சி அடைந்திருக்கனும்: பாபர் அசாமை விளாசிய முன்னாள் வீரர்
    X

    தற்போது கொஞ்சமாவது முதிர்ச்சி அடைந்திருக்கனும்: பாபர் அசாமை விளாசிய முன்னாள் வீரர்

    • சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் தொடரை 0-3 என இழந்தது.
    • இங்கிலாந்து பாஸ்பால் (BazBall) அணுகுமுறை கடைபிடித்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

    இங்கிலாந்து அணி கடந்த 2005-ம் ஆண்டுக்குப்பின் முதன்முறையாக பாகிஸ்தான் சென்று மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. மூன்று போட்டிகளிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்று பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்தது.

    இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ், பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம் ஆகிய இருவரும் அச்சமின்றி அதிரடியாக விளையாட வேண்டும் என்ற மனப்போக்கு கொண்டவர்கள். அவர்கள் எண்ணம்போல் இங்கிலாந்து அணி செயல்பட்டது.

    பாகிஸ்தான் அணியால் எந்த வகையிலும் ஈடுகொடுக்க முடியாமல் போனது. இதனால் ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் பாகிஸ்தான் அணியை வசை பாடி வருகின்றனர். குறிப்பாக பாபர் அசாம் கேப்டன் குறித்து முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.

    முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் கூறியதாவது:-

    எந்தவொரு அணிக்கும் பாகிஸ்தான் மண்ணில் தொடரை வெல்வது மிகப்பெரிய சாதனையாக இருக்கும். இங்கிலாந்துக்கு இது மிகப்பெரிய சாதனை. இங்கிலாந்து நீண்ட வருடம் கழித்து பாகிஸ்தான் மண்ணில் விளையாட வந்தனர். இது வரலாற்று தொடரை. அவர்கள் பாகிஸ்தானை ஒரு சரித்திரம் ஆக்கினார்கள். அவர்கள் நம்மிடம் ''உங்களுடைய கிரிக்கெட், மனநிலை, சிஸ்டம் ஆகியவற்றை அம்பலப்படுத்திவிட்டோம். தற்போது, அதை எப்படி முன்னேற்ற முடிவு செய்யப் போகிறீர்கள்'' என தெரிவித்துள்ளனர்.

    நாம் எங்கே தவறு செய்தோம் என்று நமக்குத் தெரியும். நமது அணிக்காக அறிமுகம் ஆனவர்கள், அதற்கு தகுதியானவர்கள்தானா?. நாம் ஆடுகளத்திற்கு ஏற்ப 11 பேருடம் விளையாடினோமா?. கேப்டன் தொழில் சரியாக செய்யப்படவில்லை. நீங்கள் பென் ஸ்டோக்ஸ், பாபர் அசாமின் கேப்டன் பதவியை பாருங்கள். பாபர் அசாம்தான் பாகிஸ்தானின் நீண்ட நாள் கேப்டனாக இருந்துள்ளார். குறைந்த பட்சம் தற்போதாவது முதிர்ச்சி அடைந்திருக்கனும். சிறந்த முடிவுகளை எடுத்திருக்கனும். மைதானத்தில் தங்களுடைய இருப்பை சிறந்ததாக ஆக்கியிருக்கனும். அவரிடம் எந்தவிதமான நேர்மறையாக விசயங்களும் தென்படவில்லை.

    முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து, எவ்வொரு முறையும் பத்திரிகையாளர் சந்திப்பு, வர்ணனையாளர்கள், மீடியாக்களில் ஒவ்வொருவரும் பாகிஸ்தானை இங்கிலாந்து டாமினெட் செய்ததாக பேசினார்கள். ஒருவர் கூட நம்பை பற்றி பேசவில்லை. பாராட்டவில்லை. ஏனென்றால், நாம் எதிர்மறையாக அணுகுமுறையுடன் விளையாடினோம்'' என்றார்.

    Next Story
    ×