search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டார்- குர்ணால் பாண்ட்யாவுக்கு லோகேஷ் ராகுல் பாராட்டு
    X

    பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டார்- குர்ணால் பாண்ட்யாவுக்கு லோகேஷ் ராகுல் பாராட்டு

    • இரண்டு வெற்றிகளும் கடின உழைப்பால் கிடைத்தது.
    • இந்த ஆடுகளம் எப்படி இருக்கப் போகிறது என்பதை நாங்கள் ஏற்கனவே உணர்ந்து இருந்தோம்.

    லக்னோ:

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று லீக் ஆட்டத்தில் ஐதராபாத்தை லக்னோ அணி வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 121 ரன்களே எடுத்தது. பின்னர் விளையாடிய லக்னோ 16 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 127 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லக்னோ அணி ஆல்-ரவுண்டர் குர்ணால் பாண்ட்யா 3 விக்கெட் வீழ்த்தி. பேட்டிங்கில் 34 ரன்கள் எடுத்தார்.

    லக்னோ 2-வது வெற்றியை (3 ஆட்டம்) பெற்றது. ஐதராபாத் தான் மோதிய இரண்டு ஆட்டத்திலும் தோற்றது. வெற்றி குறித்து லக்னோ அணி கேப்டன் லோகேஷ் ராகுல் கூறியதாவது:-

    இந்த ஆடுகளம் எப்படி இருக்கப் போகிறது என்பதை நாங்கள் ஏற்கனவே உணர்ந்து இருந்தோம். அதில் என்ன செய்ய வேண்டும் என்று எங்களுக்கு தெரியும். அதை முதல் 2 ஓவர்களிலேயே பார்த்தோம். பவர் பிளேயில் குர்ணால் பாண்ட்யா சிறப்பாக பந்து வீசுவார் என்று எனக்கு தெரியும். அது போலவே அவர் சிறப்பாக பந்து வீசினார்.

    இரண்டு வெற்றிகளும் கடின உழைப்பால் கிடைத்தது. அதில் வெவ்வேறு சவால்கள் இருந்தன. அணியில் ஒவ்வொருவரும் வித்தியாசமாக விளையாடுகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    குர்ணால் பாண்ட்யா கூறும்போது பந்து வீச்சு, பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. ஐதராபாத் அணியில் நிறைய வலது கை பேட்ஸ்மேன் இருந்ததால் என்னை முன்னதாகவே பந்து வீச அழைப்பார்கள் என்பது எனக்கு தெரியும்.

    கிரிக்கெட்டில் இருந்து 5 மாதங்கள் ஓய்வு எடுத்து இருந்தேன். எனது திறமைகளை வளர்க்க உழைத்தேன்.

    மும்பை அணியில் விளையாடியபோது 4-வது வரிசையில் களம் இறங்கினேன். எந்த வரிசையிலும் விளையாட தயாராக இருக்கிறேன் என்றார்.

    Next Story
    ×