search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    இன்ஸ்டாவில் புதிய உச்சம்.. டோனியை லிங்க் செய்து ஸ்டோரி வைத்த ஜடேஜா
    X

    இன்ஸ்டாவில் புதிய உச்சம்.. டோனியை லிங்க் செய்து ஸ்டோரி வைத்த ஜடேஜா

    • ஐபிஎல் இறுதி போட்டியில் சென்னை அணி வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தவர் ஜடேஜா.
    • இன்ஸ்டாகிராமில் 7.8 லட்சம் பேர் ஜடேஜாவை பின் தொடர்கிறார்கள்.

    இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த ஆல் ரவுண்டராக ரவீந்திர ஜடேஜா செயல்பட்டு வருகிறார். இவர் சமூக வலைதள பக்கங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் 7.8 லட்சம் பேர் இவரை பின் தொடர்கிறார்கள். இதை தனது ஸ்டோரியில் வைத்துள்ளார். இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    அந்த ஸ்டோரியில் ஒரே அணியா செயல்பட்டால் கனவை நிறைவேற்றலாம். 7.8 மில்லியன் எங்க ஜெர்சி நம்பரை போலவே என குறிப்பிட்டுள்ளார்.

    கடந்த வருடம் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது. இறுதி போட்டியில் சென்னை அணி வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தவர் ஜடேஜா. வெற்றியை தேடி தந்த ஜடேஜாவை தூக்கி டோனி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த ஐபிஎல் கோப்பையை எம்எஸ் டோனிக்கு அர்பணிப்பதாக ஜடேஜா போட்டி முடிந்தவுடன் பேட்டியளித்தார்.

    இருவரும் இந்திய அணியில் இருந்து சிஎஸ்கே வரை மிகவும் நட்பாக இருந்து வருவதும் அனைவரும் அறிந்ததே. ஐபிஎல் தொடரில் இருவரும் சில சில சேட்டைகளில் ஈடுப்பட்டு வந்தது சமூக வலைதளங்களில் அப்போது வைரலானது.

    மேலும் இந்த தொடருக்கு முன்னர் இருவருக்கும் இடையே மோதல் இருந்ததாக கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×