என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட்
கடைசி பந்தில் வெற்றிபெற்றது அற்புதமாக உணர்வு- சுப்மன் கில்
- ரஷித்கான் போன்ற ஒருவர் எப்போதும் தங்கள் அணியில் இருக்க வேண்டும் என்று அனைவரும் நினைப்பார்கள்.
- நான் ஃபினிஷிங் செய்ய வேண்டும் என்பதை நோக்கியே விளையாடுகிறேன்.
ஐபிஎல் தொடரின் 24-வது லீக் ஆட்டத்தில் குஜராத்- ராஜஸ்தான் அணிகள் நேற்று மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய குஜராத் அணி கடைசி பந்தில் வெற்றியை ருசித்தது.
இந்த வெற்றியின் மூலமாக குஜராத் அணி 6 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, 3 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது.
இந்த வெற்றிக்கு பின் குஜராத் அணி கேப்டன் சுப்மன் கில் பேசியதாவது:-
எங்களின் திட்டம் கடைசி 3 ஓவர்களில் 45 ரன்களுக்கு கொண்டு வர வேண்டும் என்பது தான். ஏனென்றால் இதுபோன்ற சில நேரங்களில் எளிதாக வெற்றிபெற முடியும்.
கணக்கு போட்டு பார்த்தால், ஒரு பேட்ஸ்மேன் 9 பந்துகளுக்கு 22 ரன்கள் சேர்க்க வேண்டும். ஆனால் 2 அல்லது 3 பந்துகள் மீதமிருக்கும் போதே வெற்றிபெற முடியும். இம்பேக்ட் பிளேயர் விதிமுறையால் எந்த மாற்றமும் இருக்காது. எப்போது வெற்றி என்பது மனநிலையை பொறுத்தது தான். நான் ஃபினிஷிங் செய்ய வேண்டும் என்பதை நோக்கியே விளையாடுகிறேன்.
இந்த ஆட்டத்தில் ராகுல் டிவாட்டியா மற்றும் ரஷீத் கான் ஃபினிஷ் செய்தது மகிழ்ச்சி. கடந்த போட்டியில் 50 சதவிகிதத்திற்கும் அதிகமான ஆட்டம் எங்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. கடைசி பந்தில் வெற்றிபெற்றது அற்புதமாக உணர்வு. ரஷீத் கான் எப்போதுமே தரமான வீரர். அவரை போன்ற ஒருவர் எப்போதும் தங்கள் அணியில் இருக்க வேண்டும் என்று அனைவரும் நினைப்பார்கள்.
இவ்வாறு கில் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்