என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட்
சந்தீப் சர்மா மீது அதிக நம்பிக்கையில் இருந்தேன்..நோபால் எங்களது வெற்றியை பறித்து விட்டது..சாம்சன்
- இது போன்ற போட்டிகளால் தான் ஐபிஎல் தொடர் மிகவும் ஸ்பெஷலாக மாறுகிறது.
- ஒவ்வொரு போட்டியும் புது புது அனுபவத்தை பெற்றுக் கொடுக்கும்.
ஐபிஎல் தொடரின் 52-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்- சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது.
இதையடுத்து கடின இலக்கை துரத்திய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர் 217 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில், தோல்விக்குப் பிறகு பேசிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறியிருப்பதாவது:-
இது போன்ற போட்டிகளால் தான் ஐபிஎல் தொடர் மிகவும் ஸ்பெஷலாக மாறுகிறது. சந்தீப் சர்மா மீது அதிக நம்பிக்கையில் இருந்தேன். நீங்கள் ஜெயித்துவிட்டீர்கள் என்று அறிவிக்கப்படும் வரையில் உங்களால் நாம் வெற்றி பெற்றுவிட்டோம் என்று நினைக்கவே முடியாது. சென்னைக்கு எதிரான போட்டியில் சந்தீப் சர்மா தான் கடைசி நேரத்தில் வெற்றி தேடிக் கொடுத்தார். ஆனால், அவர் வீசிய நோபால் கடைசி நேரத்தில் எங்களது வெற்றியை பறித்து சென்றுவிட்டது. ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடுவது என்பது எளிதான காரியம் எல்லாம் கிடையாது.
ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். ஒவ்வொரு போட்டியும் புது புது அனுபவத்தை பெற்றுக் கொடுக்கும். அடுத்து வரும் போட்டியிலாவது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். தொடர்ந்து தோல்வி அடைந்து வருவது ஏமாற்றம் அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் முதல் 5 போட்டிகளில் 4-ல் வெற்றி பெற்ற அந்த அணி கடைசியாக நடந்த 6 போட்டிகளில் வரிசையாக 5 போட்டிகளில் தோல்வி அடைந்து வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்