search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    சிஎஸ்கே ரசிகரின் வேண்டுதலை நிறைவேற்றிய சமயபுரத்து மகமாயி.. வைரலாகும் வீடியோ
    X

    சிஎஸ்கே ரசிகரின் வேண்டுதலை நிறைவேற்றிய சமயபுரத்து மகமாயி.. வைரலாகும் வீடியோ

    • ஜெயித்த உடன் உணர்ச்சி பெருக்கில் சிஎஸ்கே ரசிகர் கத்தினார்.
    • இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    நேற்றைய பரப்பரப்பான ஆட்டத்தில் கடைசி 2 பந்தில் 10 ரன்கள் தேவைப்பட்டது. அந்த பந்தை ஜடேஜா சிக்சர் அடித்தார். அதனால் கடைசி பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்டது. அந்த போட்டியை சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர் ஒருவர் டிவியில் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது டிவி முன்பு சென்று சக்தி உள்ள தெய்வமா இருந்தா இந்த ஒரு பால்ல ஜெயிக்கனுமா..ஓம் சக்தி...ஓம் சக்தி சமயபுரத்து மகமாயி.. மகமாயி டோனியோட கடைசி கேம்மா... என்று உருக்கமாக வேண்டிக்கொண்டார்.

    ஜெயித்த உடன் உணர்ச்சி பெருக்கில் அவர் கத்தினார். இதை பார்த்த அந்த சென்னை ரசிகர், உற்சாக மிகுதியில் கத்தி கூச்சலிட்டார். சாமிக்கு அருள் வந்தது போல் ஆத்தா...ஆத்தா...ஆத்தா என கத்தினார். அவரை சமாதானம் செய்யவே ஒருவர் ஓடிவந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    Next Story
    ×