search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    சென்னை அணிக்கு எதிராக கேப்டனாக களமிறங்கும் குர்ணால் பாண்ட்யா
    X

    சென்னை அணிக்கு எதிராக கேப்டனாக களமிறங்கும் குர்ணால் பாண்ட்யா

    • கேஎல் ராகுலுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் சென்னைக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் லக்னோ அணியின் கேப்டனாக குர்ணால் பாண்ட்யா செயல்படுவார்.
    • ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியின் போது கேஎல் ராகுல் காயமடைந்தார்.

    லக்னோ:

    16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. லக்னோவில் மாலை 3.30 மணிக்கு நடக்கும் 45-வது லீக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதுகிறது. சென்னை அணி இதுவரை 9 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 4 தோல்விகளுடன் 10 புள்ளிகளை பெற்றிருக்கிறது. எஞ்சிய 5 ஆட்டங்களில் 4-ல் வெற்றி தேவை என்பதால் இனி ஒவ்வொரு ஆட்டமும் சென்னைக்கு முக்கியத்துவம் பெறுகிறது.

    இந்நிலையில் கேஎல் ராகுலுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் சென்னைக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் லக்னோ அணியின் கேப்டனாக குர்ணால் பாண்ட்யா செயல்படுவார் என அந்த அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியின் போது கேஎல் ராகுல் காயமடைந்தார். அந்த போட்டியின் இரண்டாவது ஓவரின் கடைசி பந்தை டு பிளசிஸ் அடிக்க, பந்து பவுண்டரியை நோக்கி பாய்ந்தது. அதை தடுக்கும் முயற்சியில் வேகமாக ஓடியபோது கே.எல்.ராகுலின் வலது தொடையில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு தரையில் சரிந்தார். வலியால் துடித்த அவரால் எழுந்து நடக்க முடியவில்லை. பின்னர், அணியின் பிசியோ மற்றும் ரிசர்வில் இருந்த சக வீரரின் உதவியுடன் மைதானத்தை விட்டு வெளியேறினார் என்பது குறிப்பிடத்தகக்து.

    Next Story
    ×