என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட்
அந்த 2 அணியை வீழ்த்துவது மிகவும் கடினம்- ஸ்மித் கருத்து
- உலகக் கோப்பை தொடரில் முதல் 4 இடங்களுக்குள் இடம்பெற வேண்டும் என்ற எண்ணம் அனைத்து அணிகளுக்கும் இருக்கும்.
- அதுபோல நாங்களும் அரையிறுதிக்கு செல்ல விரும்புகிறேன்.
உலகக் கோப்பை தொடரில் நாளை நடக்கவுள்ள 39-வது லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகிறது. புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலியா 3-வது இடத்திலும் ஆப்கானிஸ்தான் 6-வது இடத்திலும் உள்ளது.
ஆப்கானிஸ்தான் கடைசி 3 போட்டியில் வெற்றி பெற்றுள்ளதால் நாளைய போட்டியில் மிகவும் நம்பிக்கையுடன் விளையாடும். அதேபோல முதல் 2 போட்டிகளில் தோல்வியை தழுவிய ஆஸ்திரேலியா அடுத்து விளையாடிய 5 போட்டிகளில் வெற்றி பெற்று வலுவான நிலையில் உள்ளது.
இந்நிலையில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளை வீழ்த்துவது மிகவும் கடினம் என ஆஸ்திரேலிய அணி வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
உலகக் கோப்பை தொடரில் முதல் 4 இடங்களுக்குள் இடம்பெற வேண்டும் என்ற எண்ணம் அனைத்து அணிகளுக்கும் இருக்கும். அதுபோல எங்கள் அணியும் அரையிறுதிக்கு செல்ல விரும்புகிறேன். ஆனால் அதற்கு அந்தந்த அணிகள் கடுமையாக உழைக்க வேண்டும்.
நடப்பு உலகக் கோப்பை தொடரில் முதலில் தோல்விகளை தழுவினாலும் பின்னர் வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ளோம். நாளை எங்களுக்கு மிகப் பெரிய போட்டி உள்ளது. நாங்கள் வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு தகுதி பெறுவோம் என நினைக்கிறேன். முதல் 2 இடங்களில் இருக்கும் இந்தியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்களை வெல்வது மிகவும் கடினம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்