search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    தென் ஆப்பிரிக்காவுக்கு 327 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா
    X

    தென் ஆப்பிரிக்காவுக்கு 327 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

    • டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
    • விராட் கோலி 120 பந்தில் சதம் எடுத்து 101 ரன்கள் விளாசினார்.

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற்று வரும் 37வது லீக் ஆட்டத்தில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதின.

    மதியம் 2 மணிக்கு தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

    இதில் முதலில் களமிறங்கிய, ரோகித் சர்மா 40 ரன்கள் எடுத்து எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து சுப்மன் கில் 23 ரன்களில் ஆட்டமிழந்தார்

    பின்னர், களமிறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் 77 ரன்களில் வீழ்ந்தார், விரோட் கோலியுடன் ஜோடி சேர்ந்த கே.எல் ராகுல் 8 ரன்களுடன் ஆட்டமிழந்தார்.

    சூர்யா யாதவ் 22 ரன்கள் எடுத்து அவுட்டானார். இறுதியாக, விராட் கோலி 120 பந்தில் சதம் எடுத்து 101 ரன்கள் விளாசினார். விராட்டுன் ஜடேஜா 28 ரன்கள் எடுத்து களத்தில் இருவரும் களத்தில் இருந்தனர்.

    இந்நிலையில், 50 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்கள் குவித்தது. 327 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்க உள்ளது.

    Next Story
    ×