search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    சஞ்சு சாம்சனுக்கு மீண்டும் வாய்ப்பு மறுப்பு- ரிஷப் பண்டை கேலி செய்த சசி தரூர்
    X

    சஞ்சு சாம்சனுக்கு மீண்டும் வாய்ப்பு மறுப்பு- ரிஷப் பண்டை கேலி செய்த சசி தரூர்

    • பண்ட் ஒரு திறமையான வீரர், பார்ம் இல்லாத ஒரு நல்ல வீரர்.
    • பண்ட் தனது கடைசி 11 இன்னிங்ஸ்களில் 10-ல் சரியாக ஆடவில்லை.

    கிறிஸ்ட்சர்ச்:

    இந்திய கிரிக்கெட் அணியின் நியூசிலாந்து சுற்றுப்பயணம் இன்றுடன் முடிவடைகிறது. 20 ஓவர் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது.

    இதில் முதல் ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 2-வது ஆட்டத்தில் மழையால் பாதியில் ரத்தானது. இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் இன்று நடைபெறுகிறது.

    இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கி ஆடி வருகிறது. இந்த தொடரில் சஞ்சு சாம்சனுக்கு முதல் ஒருநாள் போட்டியில் மட்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது. 2வது போட்டியில் அவருக்கு பதிலாக தீபக் ஹூடா அணியில் இடம் பிடித்தார். இந்நிலையில் அணியில் இடம் பிடித்துள்ள விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட சரியாக ஆடாமல், ரன்களை குவிக்காமல் இருக்கிறார்.

    இதையடுத்து ரசிகர்கள் அணியில் இருந்து ரிஷப் பண்ட்க்கு ஓய்வு அளித்து விட்டு சாம்சனை அணியில் ஆட வைக்க வேண்டும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் 3-வது போட்டியிலும் சாம்சனுக்கு அணியில் இடம் இல்லை.

    இந்நிலையில் ஒயிட் பால் கிரிக்கெட்டில் இருந்து ரிஷப் பண்ட் ஓய்வு எடுக்க வேண்டும் என சசி தரூர் பரிந்துரைத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

    பண்ட் 4-வது வரிசையில் சிறப்பாக செயல்பட்டார். எனவே அவரை ஆதரிப்பது அவசியம் என வி.வி.எஸ். லட்சுமணன் கூறுகிறார். பண்ட் ஒரு திறமையான வீரர், பார்ம் இல்லாத ஒரு நல்ல வீரர். அவர் தனது கடைசி 11 இன்னிங்ஸ்களில் 10-ல் சரியாக ஆடவில்லை.

    சாம்சனின் ஒருநாள் போட்டிகளில் சராசரி 66. அவர் தனது கடைசி 5 போட்டிகளிலும் ரன்களை அடித்துள்ளார் ஆனாலும் அவருக்கு அணியில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

    Next Story
    ×