search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    சென்னை மைதானத்தில் சிக்சர் அடிப்பது கடினம்- சூர்யகுமார் யாதவ்
    X

    சென்னை மைதானத்தில் சிக்சர் அடிப்பது கடினம்- சூர்யகுமார் யாதவ்

    • முட்டிப்போட்டு அடிக்கும் ஸ்வீப் வகை ஷாட் தனக்கு பிடித்தமான என சூர்யகுமார் கூறினார்.
    • இஷான் கிஷன், பண்ட் ஆகியோர் சூர்யகுமார் யாதவுக்கு அதிகமான மெசேஜ் அனுப்பும் கிரிக்கெட் வீரர்களாகும்.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி அவதாரமாக உருவெடுத்துள்ள சூர்யகுமார் யாதவ் இணையதளம் ஒன்றுக்கு அளித்துள்ள ருசிகர பேட்டி வருமாறு:-

    கேள்வி: 20 ஓவர் கிரிக்கெட்டில் உங்களது சிறந்த இன்னிங்ஸ் எது?

    பதில்: கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான அறிமுக இன்னிங்சில் 31 பந்தில் 57 ரன்கள் எடுத்தேன். அணியும் வெற்றி பெற்றது. அது எனக்கு உண்மையிலேயே சிறப்பு வாய்ந்த ஒரு இன்னிங்ஸ்.

    கேள்வி: மற்ற பேட்ஸ்மேன்கள் ஆடுவதில் இருந்து ஒரு ஷாட்டை விரும்பி எடுத்துக் கொள்வதாக இருந்தால் அது யாருடைய ஷாட்?

    பதில்: ரோகித் சர்மா அடிக்கும் புல் ஷாட்.

    கேள்வி: உங்களுக்கு பிடித்தமான ஷாட் எது?

    பதில்: முட்டிப்போட்டு அடிக்கும் 'ஸ்வீப்' வகை ஷாட்.

    கேள்வி: கடந்த கால பந்து வீச்சாளர்களில் ஒருவரின் பந்து வீச்சை எதிர்கொள்வதாக இருந்தால் அது யாருடையதாக இருக்கும்?

    பதில்: முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் (பாகிஸ்தான்)

    கேள்வி: உங்களுக்கு அதிகமான மெசேஜ் அனுப்பும் கிரிக்கெட் வீரர்கள் யார்?

    பதில்: இஷான் கிஷன், ரிஷப் பண்ட்.

    கேள்வி: உங்களுக்கும், விராட் கோலி, ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் இடையே 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடைபெற்றால் யார் வெற்றி பெறுவார்கள்?

    பதில்: விராட் கோலி.

    கேள்வி: நீங்கள் இதுவரை விளையாடியதில் சிக்சர் விளாசுவதற்கு மிகவும் கடினமாக இருந்த மைதானம் எது?

    பதில்: சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியம்.

    இவ்வாறு சூர்யகுமார் கூறினார்.

    Next Story
    ×