search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    நோ பால்கள் வீசுவது மிகப்பெரிய தவறு- ஹர்த்திக் பாண்ட்யா
    X

    நோ பால்கள் வீசுவது மிகப்பெரிய தவறு- ஹர்த்திக் பாண்ட்யா

    • அர்ஷ்தீப் சிங்கை குறை கூறவோ அல்லது கடுமையாக நடந்து கொள்ளவோ முடியாது.
    • அணியில் யாராவது புதுமுகமாக வந்தால் அவர்களுக்கு வாய்ப்பு வழங்க விரும்புகிறோம்.

    புனே:

    புனேயில் நேற்று நடந்த இரண்டாவது 20 ஓவர் போட்டியில் இலங்கையிடம் இந்தியா 16 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 206 ரன் குவித்தது.

    கேப்டன் ஷனகா 56 ரன்னும், குசல் மெண்டிஸ் 52 ரன்னும் எடுத்தனர். பின்னர் விளையாடிய இந்திய அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்தது.

    அதன் பின் சூர்யகுமார் யாதவ் (51 ரன்), அக்ஷர் பட்டேல் (65 ரன்) ஜோடி அதிரடியாக விளையாடியது. ஆனாலும் இந்திய அணியால் 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 190 ரன்களே எடுக்க முடிந்தது.

    நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணியின் பந்து வீச்சு மிகவும் மோசமாக இருந்தது. 7 நோ-பால்களை வீசினர். இதில் அர்ஷ்தீப்சிங் மட்டும் 5 நோ-பால் வீசினார். அவர் 2 ஓவர் வீசி 37 ரன் விட்டு கொடுத்தார். இது இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விட்டது.

    தோல்வி குறித்து இந்திய கேப்டன் ஹர்த்திக் பாண்ட்யா கூறியதாவது:-

    பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கின் போது பவர் பிளேயில் நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை. இது எங்களை காயப்படுத்தி விட்டது. நாங்கள் சில அடிப்படை தவறுகளை செய்தோம்.

    சர்வதேச அளவில் விளையாடும் நாங்கள் அதை செய்யக்கூடாது. அது என்னவென்று அனைவருக்கும் தெரியும். நாம் எதை கட்டுப்படுத்த முடியும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

    போட்டியில் அன்று நல்ல நாளாக இருக்கலாம். கெட்ட நாளாகவும் அமையலாம். ஆனால் அடிப்படை விஷயங்களில் இருந்து விலகி செல்லக்கூடாது. அர்ஷ்தீப் சிங்கின் சூழ்நிலை மிகவும் கடினமாக இருந்தது. அவரை குறை கூறவோ அல்லது கடுமையாக நடந்து கொள்ளவோ முடியாது. ஆனால் எந்த வடிவத்திலும் நோ-பால் வீசியது குற்றம் என்பது எங்களுக்கு தெரியும்.

    ராகுல் திரிபாதி 3-வது வீரராக விளையாடுவது வழக்கம். அணியில் யாராவது புதுமுகமாக வந்தால் அவர்களுக்கு வாய்ப்பு வழங்க விரும்புகிறோம். இதனால் தான் ராகுல் திரிபாதி 3-வது வீரராக களம் இறக்கப்பட்டார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மூன்று ஆட்டம் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. முதல் ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றது. 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி நாளை ராஜ்கோட்டில் நடக்கிறது.

    Next Story
    ×