search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    இந்தியாவிடம் தோற்றாலும் உலக கோப்பையை வெல்வதே எங்களது நோக்கம்- ஷதாப் கான்
    X

    இந்தியாவிடம் தோற்றாலும் உலக கோப்பையை வெல்வதே எங்களது நோக்கம்- ஷதாப் கான்

    • நாங்கள் அங்கு செல்லும் போது அது அவர்களது சொந்த மைதானமாக இருக்கும். ரசிகர்கள் கூட்டம் எங்களுக்கு எதிராக இருக்கும்.
    • என்னை பொறுத்தரை இந்தியாவிடம் தோற்றாலும் இறுதியில் கோப்பையை வெல்வதே எங்களது முக்கிய நோக்கமாக இருக்கும்.

    இஸ்லாமாபாத்:

    50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் வருகிற அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறுகிறது.

    10 அணிகள் பங்கேற்கும் இப்போட்டித் தொடரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி அக்டோபர் 15-ந்தேதி அகமதாபாத்தில் நடக்கிறது.

    இப்போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    இந்த நிலையில் உலக கோப்பை போட்டி குறித்து பாகிஸ்தான் அணியின் ஆல்-ரவுண்டர் ஷதாப் கான் கூறியதாவது:-

    இந்தியாவுக்கு எதிராக விளையாடுவது வித்தியாசமான மகிழ்ச்சியுடன் இருக்கும். இதில் ஒட்டு மொத்த அழுத்தமும் வித்தியாசமானது. நாங்கள் அங்கு செல்லும் போது அது அவர்களது சொந்த மைதானமாக இருக்கும். ரசிகர்கள் கூட்டம் எங்களுக்கு எதிராக இருக்கும்.

    ஆனால் நாங்கள் அங்கு உலக கோப்பையில் விளையாட செல்கிறோம். எனவே அதுபற்றிதான் யோசிக்க வேண்டும். ஏனென்றால் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்று விட்டு உலக கோப்பையை வெல்லவில்லை என்றால் அதில் எந்த பலனும் இல்லை.

    என்னை பொறுத்தரை இந்தியாவிடம் தோற்றாலும் இறுதியில் கோப்பையை வெல்வதே எங்களது முக்கிய நோக்கமாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×