search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    முதல் டி20 போட்டி- இங்கிலாந்திற்கு 199 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா
    X

    ஹர்திக் பாண்ட்யா

    முதல் டி20 போட்டி- இங்கிலாந்திற்கு 199 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா

    • இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங் அறிமுக வீரராக களம் இறங்கினார்.
    • இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யா அரை சதம் அடித்தார்.

    சவுத்தம்டன்:

    இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையே மூன்று டி20 போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளன.

    இரு அணிகளுக்கும் இடையே முதல் டி20 போட்டி சவுத்தம்டனில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.

    இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங் அறிமுகமாகி உள்ளார். துவக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா 24 ரன்களிலும், இஷான் கிஷன் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தீபக் ஹூடா 33 ரன்களும், சூரியகுமார் யாதவ் 39 ரன்களும் அடித்தனர்.

    ஹர்திக் பாண்ட்யா 33 பந்துகளில் 51 ரன்கள் குவித்தார். அக்சர் படேல் 17 ரன்னுடன் வெளியேறினார். இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 199 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி விளையாட உள்ளது.

    Next Story
    ×