என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட்
உலகக் கோப்பையில் முதன்முறையாக "டக்அவுட்" ஆன விராட் கோலி
- ஸ்டோக்ஸ் எளிதாக கேட்ச் பிடித்தார்.
- விராட் கோலி உலகக் கோப்பையில் (ஒருநாள் மற்றும் டி20) முதன்முறையாக டக்அவுட் ஆகியுள்ளார்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி லக்னோவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி இந்தியா பேட்டிங் செய்து வருகிறது.
தொடக்க வீரர் சுப்மன் கில் 9 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து விராட் கோலி களம் இறங்கினார். கவர் டிரைவ் மற்றும் ஆஃப் சைடு திசைகளில் ரன்கள் அடிக்க முடியாத வகையில் பீல்டிங் அமைத்தார் இங்கிலாந்து கேப்டன். பந்து வீச்சாளர்களும் அதன்படி பந்து வீச, விராட் கோலி ரன் கணக்கை தொடங்க சிரமப்பட்டார்.
டேவிட் வில்லே பந்தை இறங்கி வந்து அடிக்க முயன்றார். அப்போது பந்து மிட்ஆஃப் திசையில் நின்ற ஸ்டோக்ஸ் நோக்கி பந்து சென்றது. ஸ்டோக்ஸ் எளிதாக கேட்ச் பிடித்தார். இதனால் விராட் கோலி 9 பந்துகள் சந்தித்து ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார்.
இதன்மூலம் விராட் கோலி உலகக் கோப்பையில் (ஒருநாள் மற்றும் டி20) முதன்முறையாக டக்அவுட் ஆகியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்