search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ரோகித், ஜடேஜா அசத்தல் - இங்கிலாந்து வெற்றி பெற 171 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா
    X

    ரோகித் சர்மா

    ரோகித், ஜடேஜா அசத்தல் - இங்கிலாந்து வெற்றி பெற 171 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா

    • இந்தியாவின் ரோகித் சர்மா, ரிஷப் பண்ட் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 49 ரன் எடுத்தது.
    • இங்கிலாந்து வீரர் ரிச்சர்ட் கிலீசன் ரோகித், கோலி உள்ளிட்ட 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    பர்மிங்காம்:

    இங்கிலாந்து, இந்திய அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி இன்று பர்மிங்காமில் நடக்கிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் பவுலிங் தேர்வு செய்தார்.

    அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, ரிஷப் பண்ட் இறங்கினர். இந்த ஜோடி சிறப்பான தொடக்கம் கொடுத்தது. கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினர்.

    அணியின் எண்ணிக்கை 49 ஆக இருந்தபோது ரோகித் சர்மா 20 பந்தில் 2 சிக்சர், 3 பவுண்டரி உள்பட 31 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

    அடுத்து இறங்கிய விராட் கோலி ஒரு ரன்னில் பெவிலியன் திரும்பினார். அவரை தொடர்ந்து ரிஷப் பண்ட் 26 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    சூர்யகுமார் யாதவ் 15, ஹர்திக் பாண்ட்யா 12, தினேஷ் கார்த்திக் 12, ஹர்ஷல் படேல் 13, புவனேஷ்வர் குமார் 2 ரன்னில் வெளியேறினர்.

    ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் ரவீந்திர ஜடேஜா பொறுப்புடன் ஆடினார்.

    இறுதியில், இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்தது. ஜடேஜா 46 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இங்கிலாந்து சார்பில் ஜோர்டான் 4 விக்கெட், கிலீசன் 3 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்குகிறது.

    Next Story
    ×