search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    டிஎன்பிஎல் இறுதிப்போட்டி - கோப்பையை பகிர்ந்து கொண்ட சேப்பாக், கோவை அணிகள்
    X

    கோப்பையுடன் இரு அணி கேப்டன்கள்

    டிஎன்பிஎல் இறுதிப்போட்டி - கோப்பையை பகிர்ந்து கொண்ட சேப்பாக், கோவை அணிகள்

    • முதலில் ஆடிய கோவை அணி 138 ரன்களை எடுத்தது.
    • அடுத்து ஆடிய சேப்பாக் அணி 4 ஓவர் மட்டுமே ஆடியது.

    கோவை:

    6-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி கோவை எஸ்.என்.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    சாம்பியன் பட்டத்துக்கான இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீசும், கோவை கிங்சும் பலப்பரீட்சையில் இறங்கின.

    டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. மழை காரணமாக போட்டி 17 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது.

    அதன்படி, முதலில் பேட் செய்த கோவை அணி நிர்ணயிக்கப்பட்ட 17 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 138 ரன்களை எடுத்துள்ளது. அந்த அணியின் சாய் கிஷோர் 45 பந்தில் 65 ரன்கள் குவித்தார். கங்கா ஸ்ரீதர் ராஜு 27 ரன்னும், ஷாருக் கான் 20 ரன்னும் எடுத்தனர்.

    சேப்பாக் அணி சார்பில் சந்தீப் வாரியர் 4 விக்கெட், சாய் கிஷோர் 3 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் கவுசிக் காந்தி ஒரு ரன்னிலும், ஜெகதீசன் 2 ரன்னிலும் அவுட்டாகினர்.

    4 ஓவர்கள் முடிந்த நிலையில் சேப்பாக் அணி 2 விக்கெட் இழப்புக்கு 14 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது மீண்டும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் கைவிடப்பட்டது.

    இதையடுத்து, டிஎன்பிஎல் கோப்பை சேப்பாக் மற்றும் கோவை அணிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.

    Next Story
    ×