search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    முதல் டெஸ்ட் போட்டி: தேநீர் இடைவேளை வரை 8 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா திணறல்
    X

    முதல் டெஸ்ட் போட்டி: தேநீர் இடைவேளை வரை 8 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா திணறல்

    • இந்திய அணி தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
    • ஆஸ்திரேலிய அணி தரப்பில் லபுஷேன் 49 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    நாக்பூர்:

    இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது.

    அதன்படி அந்த அணி முதலில் பேட்டிங் செய்து செய்து வருகிறது. இந்திய அணி தரப்பில் விக்கெட் கீப்பராக கே.எஸ்.பரத் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் தங்களது அறிமுக போட்டியில் இன்று விளையாடி வருகின்றனர்.

    அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னரும், உஸ்மான் கவாஜாவும் களமிறங்கினர். இருவரும் வந்த வேகத்திலேயே வெளியேறினர். கவாஜா ஒரு ரன்னின் சிராஜின் வேகத்தில் ஆட்டமிழந்தார். வார்னர் ஷமியின் பந்திவீச்சில் போல்டாகி வெளியேறியேறினார்.

    ஆட்டத்தின் தொடக்கத்திலேயே இரு விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணியை ஸ்மித்தும், லபுஷேனும் சரிவில் இருந்து மீட்டனர். லபுஷேன் 47 ரன்களுடனும், ஸ்மித் 19 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். முதல் நாள் உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலிய அணி 32 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் எடுத்துள்ளது.

    உணவு இடைவேளை முடிந்து வந்த நிலையில் இந்திய அணியின் சுழலில் ஆஸ்திரேலியா அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. லபுஷேன் 49, மாட் ரென்ஷா 0, ஸ்மித் 37, அலெக்ஸ் கேரி 36, கம்மின்ஸ் 6, டாட் மர்பி 0 என வெளியேறினர்.

    தேநீர் இடைவேளை வரை ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டுகளும் அஸ்வின் 2 விக்கெட்டுகளும், சமி மற்றும் சிராஜ் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    Next Story
    ×