search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    தொடரை வெல்லப் போவது யார்? - 3வது டி20 போட்டியில் இந்தியா,  இலங்கை இன்று மோதல்
    X

    தொடரை வெல்லப் போவது யார்? - 3வது டி20 போட்டியில் இந்தியா, இலங்கை இன்று மோதல்

    • 3-வது டி20 போட்டி ராஜ்கோட்டில் இன்று நடைபெற உள்ளது.
    • இந்தப் போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற இரு அணிகளும் போராடும்.

    ராஜ்கோட்:

    இந்தியா வந்துள்ள இலங்கை அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி, லோகேஷ் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

    மும்பையில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. புனேயில் நடந்த 2-வது டி20 போட்டியில் இலங்கை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில், தொடரை வெல்லப் போவது யார் என்பதை நிர்ணயிக்கும் 3-வது டி20 போட்டி ராஜ்கோட் நகரில் இன்று நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற இரு அணிகளும் போராடும்.

    Next Story
    ×