search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    கற்பழிப்பு வழக்கில் விடுதலை ஆகும் வரை நடிகர் சங்கத்தில் சேரமாட்டேன் - திலீப் கடிதம்
    X

    கற்பழிப்பு வழக்கில் விடுதலை ஆகும் வரை நடிகர் சங்கத்தில் சேரமாட்டேன் - திலீப் கடிதம்

    நடிகையை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் இருந்து விடுதலை ஆகும் வரை நடிகர் சங்கத்தில் சேரமாட்டேன் என்று நடிகர் திலீப் நடிகர் சங்கத்துக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார். #ActressAbductionCase #Dileep
    மலையாள நடிகர்களுக்காக இயங்கி வரும் அமைப்பு ’அம்மா’. இதில் மலையாள நடிகையை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் திலீப் கடந்த வாரம் மீண்டும் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.

    இதனை கண்டித்து ‘அம்மா’வில் இருந்து பாதிக்கப்பட்ட அந்த நடிகை மற்றும் சக நடிகைகள் ரீமா கல்லிங்கல், கீது மோகன் தாஸ், ரம்யா நம்பீசன் ஆகியோர் உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகினார்கள்.

    இந்தநிலையில் நடிகர் திலீப் ‘அம்மா’வுக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    நடிகர் சங்கத்தில் என்னை மீண்டும் சேர்க்க உள்ளதாக அறிந்தேன். என்னிடம் விளக்கம் கேட்காமல் என்னை வெளியேற்றிய தீர்மானத்தை ரத்து செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

    ஆனால் நான் எந்த தவறும் செய்யாமல் வழக்கில் சிக்கிக் கொண்டேன். இதில் இருந்து நிரபராதி என்று விடுதலையாகும் வரை எந்த சினிமா சங்கத்திலும் சேர விரும்பவில்லை. நடிகர் சங்கத்தை சிலர் அவமானப்படுத்துவது கவலை அளிக்கிறது.

    இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார். இந்த கடிதத்தை தனது சமூக வலைதள பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.



    முன்னதாக நடிகை ரம்யா நம்பீசன் அளித்த பேட்டி வருமாறு:-

    ‘‘திலீப்பை மீண்டும் சேர்த்துக்கொண்டது மிகவும் பொறுப்பற்றத்தனம். இனியும் இதை எல்லாம் பொறுத்துகொண்டு இருக்க முடியாது. அதனால் விலகி விட்டோம்.

    நாங்கள் நால்வரும் அந்தச் சங்கத்திலிருந்து விலகிய பின்னர் அவர்கள் எங்களுக்கு ஏதாவது பதில் சொல்வார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால் இதுவரை எந்த பதிலும் எங்களுக்கு வரவில்லை. இந்த சங்கத்தில் இருக்கும் மற்ற பெண்களிடமும் நாங்கள் பேசிக்கொண்டு இருக்கிறோம்.

    நாங்கள் பெண்களுக்கான தனிஅமைப்பு தொடங்கும் வரை அதற்கான தேவை இல்லை. ஆனால் நாங்கள் எல்லோரும் பெண்களுக்கு என்று உருவாக்கிய ஒரு இடம் அது. சினிமாவில் பெண்களுக்கு எப்படிப்பட்ட இடம் இருக்கவேண்டும் என்று தெளிவாக திட்டமிட்டு வருகிறோம். ரேவதி மாதிரியான மூத்த நடிகைகள் எல்லாம் எங்களுக்கு ரொம்ப உதவியாக இருக்கிறார்கள்.

    இந்த விவகாரம் நடக்கும் வரை அம்மா சங்கத்துக்கும் எங்கள் அமைப்புக்கும் நல்ல உறவு தான் இருந்தது. இப்போது அவர்கள் எப்படி பதில் அளிக்கிறார்கள் என்பதை பொறுத்துதான் நாங்கள் அடுத்து முடிவெடுக்க வேண்டும்’’ என்று கூறி இருக்கிறார். #ActressAbductionCase #Dileep #AMMA
    Next Story
    ×