search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தேசிய விருதுபெற்ற பவதாரணி மறைவு கவலையளிக்கிறது- வைரமுத்து
    X

    தேசிய விருதுபெற்ற பவதாரணி மறைவு கவலையளிக்கிறது- வைரமுத்து

    • பின்னணி பாடகியாக வலம் வந்தவர் பவதாரிணி.
    • இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்.

    இளையராஜாவின் மகளும் பின்னணி பாடகியுமான பவதாரிணி பல பாடல்களை பாடியுள்ளார். மேலும் சில படங்களுக்கு இசையமைத்தும் உள்ளார். இவரது கணவர் விளம்பர நிர்வாகியாக உள்ளார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.


    47 வயதான பாடகி பவதாரிணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர். இவர் ஆயுர்வேத மருத்துவ சிகிச்சைக்காக இலங்கைக்கு அழைத்து செல்லப்பட்டார். கடந்த 5 மாதங்களாக உடல் நல பிரச்சனையில் இருந்த பவதாரிணி இலங்கையில் நேற்று காலமானார். இவரது மறைவு திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது உடல் இன்று மாலை சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது.


    இவரது மறைவிற்கு திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "தேசிய விருதுபெற்ற

    பாடகி பவதாரிணியின் மறைவு

    அதிர்ச்சியும் கவலையும் தருகிறது

    துயர்ப்படும்

    உள்ளங்களுக்கெல்லாம்

    ஆழ்ந்த இரங்கல்" என்று குறிப்பிட்டுள்ளார்.


    Next Story
    ×