search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தீபாவளிக்கு திரையரங்குகளில் சிறப்பு காட்சிகள் ஒளிபரப்ப அனுமதி
    X

    ப்ரின்ஸ் - சர்தார்

    தீபாவளிக்கு திரையரங்குகளில் சிறப்பு காட்சிகள் ஒளிபரப்ப அனுமதி

    • சிவகார்த்திகேயனின் ப்ரின்ஸ் மற்றும் கார்த்தியின் சர்தார் திரைப்படங்கள் நாளை வெளியாக உள்ளது.
    • தீபாவளி பண்டியை ஒட்டி வெளியாகும் படங்களின் சிறப்பு காட்சிகளை ஒளிபரப்ப தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.

    நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வருகிற 24-ம் தேதி கொண்டாட உள்ள நிலையில், அதற்கு இப்பொழுதே மக்கள் தயாராகி வருகின்றனர். அதேபோல் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாவது வழக்கம். அதன்படி வெள்ளிக்கிழமையன்று வெளியாகக்கூடிய படங்கள் மற்றும் தீபாவளியை ஒட்டி வெளியாகக்கூடிய படங்களுக்கு திட்டமிட்டு மக்கள் ஆர்வமாக சென்று கண்டுகளிப்பது உண்டு. அதற்கு ஏதுவாக ஏற்கனவே ஒளிப்பரப்பக்கூடிய காட்சிகளில் சில மாற்றங்கள் செய்து கூடுதலாக சில சிறப்பு காட்சிகளை ஒளிப்பரப்ப திரையரங்க உரிமையாளர்கள் திட்டமிடுவர்.

    சர்தார் - ப்ரின்ஸ்

    தீபாவளி பண்டிகைக்காக தியேட்டர்களில் வருகிற 22, 23, 24 ஆகிய தேதிகளில் கூடுதலாக ஒரு சிறப்பு காட்சி திரையிட ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் மேலும் 21, 25, 26, 27 ஆகிய தேதி களிலும் கூடுதலாக ஒரு சிறப்பு காட்சியை திரையிட அனுமதிக்க வேண்டும் என்று திரையரங்க உரிமையாளர்கள் சங்க பொதுச் செயலாளர் பன்னீர் செல்வம் அரசுக்கு கடிதம் எழுதி இருந்தார்.

    இந்த நிலையில் வருகிற 21, 25, 26, 27 ஆகிய தேதிகளிலும் தியேட்டர்களில் கூடுதலாக ஒரு சிறப்பு காட்சியை திரையிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த சிறப்பு காட்சி காலை 9 மணிக்கு திரையிடப்படும். எனவே நாளை (21-ந் தேதி) முதல் 27-ந்தேதி வரை 7 நாட்கள் தியேட்டர் களில் ஒரு சிறப்பு காட்சியுடன் சேர்த்து தினமும் 5 காட்சிகள் திரையிடப்பட உள்ளது. முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கும் நிலையில் கடைசி காட்சி இரவு 1.30 மணிக்கு முடிவடையும்.


    சிவகார்த்திகேயனின் ப்ரின்ஸ் மற்றும் கார்த்தியின் சர்தார் படங்கள் 21-ம் (நாளை) தேதி திரையரங்குகளில் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×