search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பாரில் யாரும் அடிமையில்லை என்று கூற வா.. ட்ரெண்டாகும் பொன்னியின் செல்வன் -2 ஆந்தம்
    X

    பொன்னியின் செல்வன் -2

    பாரில் யாரும் அடிமையில்லை என்று கூற வா.. ட்ரெண்டாகும் 'பொன்னியின் செல்வன் -2' ஆந்தம்

    • 'பொன்னியின் செல்வன் -2' திரைப்படம் வருகிற 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • இப்படத்தின் புரொமோஷனுக்காக படக்குழுவினர் இந்தியா முழுவதும் செல்ல இருக்கின்றனர்.

    மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியான படம் பொன்னியின் செல்வன்-1. இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று சில விருதுகளையும் குவித்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிற 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    பொன்னியின் செல்வன் -2

    இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படம் தென்னிந்திய சினிமாவில் முதல்முறையாக 4DX தொழில்நுட்பத்தில் வெளியாகவுள்ள திரைப்படமாகும். இன்று முதல் இந்தப் படத்தின் புரொமோஷன் தொடங்குகிறது. முதல் பாகத்தைப் போல இந்தப் பாகத்தின் புரொமோஷனுக்கும் படக்குழுவினர் இந்தியா முழுவதும் செல்ல இருக்கின்றனர்.


    பொன்னியின் செல்வன் -2

    இதைத்தொடர்ந்து, 'பொன்னியின் செல்வன் -2' படத்திற்காக பிரத்யேகமாக ஆந்தம் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. சிவா ஆனந்த் எழுதியுள்ள இந்த பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்து பாடியுள்ளார். இந்த பாடல் தற்போது ரசிகர்களின் கவனம் ஈர்த்து ட்ரெண்டாகி வருகிறது.



    Next Story
    ×