search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    கோபம் வரலனா நான் அமுதவாணனாக தான் இருக்கனும்.. விளாசிய தனலட்சுமி..
    X

    பிக்பாஸ் சீசன் 6

    கோபம் வரலனா நான் அமுதவாணனாக தான் இருக்கனும்.. விளாசிய தனலட்சுமி..

    • பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் 65-வது நாட்களை நெருங்கியுள்ளது.
    • இன்று வெளியான புரோமோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போதுவரை சாந்தி, ஜி.பி. முத்து, அசல், ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி, ஆயிஷா, ராம் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதில் தற்போது 12 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 65-வது நாட்களை நெருங்கியுள்ளது.


    பிக்பாஸ் சீசன் 6

    இந்நிலையில், இந்த வாரம் சொர்க்கமா.. நரகமா.. என்ற டாஸ்க் நடந்து வருகிறது. இதற்காக வீட்டில் உள்ளவர்கள் சொர்க்கத்தினர், நரகத்தினர் என இரண்டு அணிகளாக பிரிந்து உள்ளனர். கார்டன் ஏரியாவில் நடைபெறும் இந்த டாஸ்கிற்காக வீட்டில் சிறி கூண்டு வடிவில் ஜெயில் அமைக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து இன்று வெளியான மூன்றாவது புரோமோவில் எந்த விஷயங்களை மாற்றிக் கொண்டால் தங்களைப் போல சொர்க்கத்தை வந்து சேர முடியும் என்று அறிவுரை கூற வேண்டும் என்று சொர்க்கத்தினருக்கு பிக்பாஸ் வலியுறுத்துகிறார். இதில் தனலட்சுமி கோபத்தை தவிர்த்தால் அவர் கண்டிப்பாக சொர்க்கத்திற்கு வருவார் என்று அமுதவாணன் கூறுகிறார்.


    பிக்பாஸ் சீசன் 6

    இதனால் கோபமடைந்த தனலட்சுமி தேவையில்லாத விஷயத்திற்கு கோபப்படுவதை நான் குறைத்திருக்கிறேன். இதற்கு மேல் நான் கோபப்படாமல் இருப்பதற்கு அமுதவாணனாக தான் இருக்க வேண்டும் என்று காட்டமாக கூறுகிறார். இந்த புரோமோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.





    Next Story
    ×