என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகர் கார்த்தி அனுப்பிய வாழ்த்து.. நெகிழ்ந்து போன விக்னேஷ் சிவன்..
    X

    நயன்தாரா - விக்னேஷ் சிவன் - கார்த்தி

    சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகர் கார்த்தி அனுப்பிய வாழ்த்து.. நெகிழ்ந்து போன விக்னேஷ் சிவன்..

    • நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியினருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன.
    • இவர்களுக்கு திரைப்பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகியான நயன்தாரா, கடந்த ஜூன் 9-ம் தேதி இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு இருவரும் வெளிநாடுகளுக்கு தேனிலவு சென்று அங்கிருந்து புகைப்படங்களை பதிவிட்டு வந்தனர். மேலும் படப்பிடிப்பிலும் பிசியாக இருந்தனர்.


    நயன்தாரா - விக்னேஷ் சிவன்

    இதையடுத்து தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக விக்னேஷ் சிவன் சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். அந்த பதிவில், நயன்தாராவும் நானும் அம்மா, அப்பா ஆகிவிட்டோம். எங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. பிரார்த்தனைகள், முன்னோர்களின் ஆசீர்வாதங்கள், நல்ல செயல்கள் எல்லாம் சேர்ந்து எங்களுக்கு ஆசீர்வதிக்கப்ட்ட இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. உங்கள் அனைவரின் ஆசிர்வாதமும் எங்களுக்காக வேண்டும் என பதிவிட்டிருந்தார். அவர்களுக்கு ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

    அதேசமயம் திருமணமான நான்கே மாதத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக அறிவித்திருப்பது பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தி கேள்வி எழுப்ப செய்துள்ளது. இருந்தும் ரசிகர்கள், வாடகைத்தாய் மூலம் இருவரும் குழந்தை பெற்றுள்ளனர் என்று பதிவிட்டு வருகின்றனர்.


    விக்னேஷ் சிவன் பதிவு

    மேலும், பல பிரச்சினைகள் எழுந்துள்ள நிலையில், நடிகர் கார்த்தி, நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியினருக்கு வாழ்த்து தெரிவித்து பூங்கொத்து அனுப்பியுள்ளார். இதனை விக்கி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து நன்றி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×