என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    அன்று பாக்யராஜ் செய்த செயலுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது..!- ரஜினி நெகிழ்ச்சி
    X

    அன்று பாக்யராஜ் செய்த செயலுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது..!- ரஜினி நெகிழ்ச்சி

    நான் ஆவேசமாக பேசும்போது முதலமைச்சருக்கு affect ஆகிடுச்சு.

    தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற இயக்குனர்களில் ஒருவரும், நடிகருமான பாக்யராஜ், சினிமாவிற்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவு மற்றும் அவரது பிறந்தநாளையொட்டி நேற்று விழா ஒன்று நடைபெற்றது.

    அதில் திரைப்பிரபலங்கள் பலரும் பங்கேற்று இருந்தனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விழாவில் பங்கேற்று பாக்யராஜ்-க்கு வாழ்த்து தெரிவித்தார்.

    இதனை தொடர்ந்து விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:-

    இன்னொரு ஒரு நிகழ்வு. என் வாழ்க்கையிலே பாக்யராஜை மறக்க முடியாது. இங்க வந்ததுக்கு முக்கிய காரணம் கூட இதை சொல்லணும். 1995-ல் சிவாஜி சாருக்கு மலேசியாவில் விருது கொடுத்தார்கள்.

    அதற்காக அவரை தமிழ் திரைப்படத்துறை பாராட்டணும், அது அரசும் சேர்ந்து பாராட்டணும் என்று சொல்லி சேப்பாக்கத்தில் மிகப்பெரிய விழா வைத்திருந்தார்கள். அதற்கு சிறப்பு விருந்தினர் முதலமைச்சர் தான் அவர் தலைமையில் தான் விழா.

    விழாவில் நன்றி தெரிவித்து நான் பேசுகையில், அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவை பார்த்து கொஞ்சம் ஆவேசமாக பேசினேன். எப்பவுமே இந்த கோபத்துக்கு ஆயுள் கம்மி. ஆனால் கோபத்தில் உதிர்ந்த வார்த்தைக்கு ஆயுள் ரொம்ப அதிகம். இதனால் தான் கோபத்தில் இருக்கும்போது வார்த்தைகளை அளந்து, அளந்து பேசணும் என்று பெரியவர்கள் சொல்வார்கள்.

    நான் ஆவேசமாக பேசும்போது முதலமைச்சருக்கு affect ஆகிடுச்சு. விழாவில் சிவாஜி சார் இருந்தாலும் கூட நான் ஏதோ பேசிட்டேன். அதன்பிறகு என்பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஸ்ரீதேவி ஏன் இப்படியெல்லாம் என்று கேட்டார்கள்.

    ஆனால் எனக்கு ஒன்னும் புரியவில்லை. அதன் பிறகு கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் என்னை நிறைய பேர் சூழ்ந்து தலையில் அடிக்கிறாங்க, திட்டுறாங்க... எனக்கு ஒன்னும் புரியவில்லை.

    அந்த இடத்தில் எஸ்.ஐ. எல்லாம் இருக்காங்க. ஆனா அவங்க எதுவும் செய்யவில்லை. அப்போ பாக்யராஜ் ஓடி வந்து அவர்களை பார்த்து கத்தி என்னை வாகனத்தில் ஏற்றி பாதுகாப்பாக அனுப்பி வைத்தார். அதை என்னால் மறக்கவே முடியாது. அதற்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் கூட ஒன்றும் கிடையாது. அருமையான மனிதர், நீங்க நீண்ட நாள் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும். வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×