என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
சந்தானத்தின் புதிய பட டைட்டில், பர்ஸ்ட்-லுக்கை வெளியிடும் கமல்
- இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.
- பல வெற்றி படங்களுக்கு கதை, வசனம் எழுதிய எழிச்சூர் அரவிந்தன் இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி உள்ளார்.
ஜி.என்.அன்புசெழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம், 'வெள்ளைக்கார துரை', 'தங்கமகன்' 'மருது', 'ஆண்டவன் கட்டளை'உள்ளிட்ட வெற்றிபடங்கள் தயாரித்ததை தொடர்ந்து 5-வதாக சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் ஒன்றை பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கிறது.
நடிகர் சந்தானம் தமிழில் கடைசியாக 'கிக்'படத்தில் நடித்தார். தற்போது அன்புசெழியனின் தயாரிப்பில் புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை இயக்குனர் என்.ஆனந்த் இயக்கி வருகிறார். படத்தில் பிரியாலயா கதாநாயகியாக அறிமுகமாகிறார். தம்பி ராமையா, விவேக் பிரசன்னா, முனிஷ் காந்த், பால சரவணன் ஆகியோரும் நடித்து உள்ளனர். இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.
பல வெற்றி படங்களுக்கு கதை, வசனம் எழுதிய எழிச்சூர் அரவிந்தன் இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி உள்ளார். படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. அனைத்து இளைஞர்களும் ரசித்து கொண்டாடும் விதமாக சந்தானத்தின் கதாபாத்திரம் உருவாகி உள்ளது.
சென்னை மற்றும் அதன் சுற்றுப் புறங்களில் இப்படத்தின் படப்பிடிப்புகள் நடத்தப்பட்டது. தற்போது முழுவீச்சில் இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் 'டைட்டில்' மற்றும் 'பர்ஸ்ட் லுக்' நாளை காலை 10.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. இதனை நடிகர் கமல்ஹாசன் வெளியிடுகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்