search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பிரபல திரைப்பட தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் கைது
    X

    பிரபல திரைப்பட தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் கைது

    • சிவசக்தி பாண்டியன் மீது நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு.
    • சிவசக்தி பாண்டியனை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

    பிரபல திரைப்பட தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன். காதல் கோட்டை, வெற்றிக் கொடிகட்டு, காலமெல்லாம் காதல் வாழ்க உள்ளிட்ட படங்களை தயாரித்தவர்.

    இவர், அல்லு அர்ஜூனை வைத்து தயாரித்த படத்திற்காக பிரபல நிறுவனத்தில் ரூ.1.70 கோடி கடன் பெற்ற நிலையில், திரும்ப அளிக்கவில்லை என புகார் அளிக்கப்பட்டது.

    இதைதொடர்ந்து, சிவசக்தி பாண்டியன் மீது நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு தொடரப்பட்டது.

    இந்நிலையில், தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் கைது செய்யப்பட்டுள்ளார்.

    நீதிமன்ற உத்தரவுப்படி, சிவசக்தி பாண்டியனை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×