என் மலர்
சினிமா செய்திகள்

சல்மான் கான்
சல்மான் கானை பாம்பு கடித்ததால் பரபரப்பு
பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக சல்மான் கான் தனது பண்ணை வீட்டிற்கு சென்றிருந்தார்.
மும்பை:
நடிகர் சல்மான் கான் நாளை தனது 56-வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். இதற்காக அவர் பன்வெல்லில் உள்ள பண்ணை வீட்டிற்கு சென்றிருந்தார். அங்கு செடிகளுக்கு இடையே இருந்த பாம்பு ஒன்று சல்மான் கானை கடித்தது.
இதையடுத்து அவர் கமோதில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்து செல்லப்பட்டார். சல்மான் கானை பரிசோதித்த மருத்துவர்கள் அவரை கடித்த பாம்பு விஷமில்லாதது என தெரிவித்தனர். இதையடுத்து அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
Next Story






