என் மலர்tooltip icon

    சினிமா

    பா.இரஞ்சித்
    X
    பா.இரஞ்சித்

    புதைக்கப்பட்ட சமூகநீதியை மீட்டெடுக்க வேண்டும் - பா.இரஞ்சித்

    மெட்ராஸ், காலா, கபாலி படங்களை இயக்கிய இயக்குனர் பா.இரஞ்சித் நீட் தேர்வை நிறுத்த வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
    தமிழகத்தில் நீட் தேர்வுக்கு பதிலாக மாற்று வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி இயக்குனர் அலுவலகத்தில் மாணவர்களிடத்தில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.

    அறிக்கை
    பா. இரஞ்சித் அறிக்கை

    சமீபத்தில், நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்பு குறித்து பெற்றோர் மற்றும் மாணவர்கள் அரசுக் குழுவிடம் தெரிவிக்க வேண்டும் என நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்தார். தற்போது இயக்குனர் பா.இரஞ்சித், நீட் எனும் கொடுங்கோன்மையை நிறுத்தவும் புதைக்கப்பட்ட சமூகநீதியை மீட்டெடுத்து மாணவர்களின் விடுதலைக்கு வழிவகுக்கவும்
    நீலம் பண்பாட்டு மையம் சார்பாக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

    Next Story
    ×