search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    ஜெயம்ரவி குடும்பத்தினர் முதல்வரை சந்தித்து நிதியுதவி அளித்தபோது எடுத்த புகைப்படம்
    X
    ஜெயம்ரவி குடும்பத்தினர் முதல்வரை சந்தித்து நிதியுதவி அளித்தபோது எடுத்த புகைப்படம்

    கொரோனா தடுப்பு பணிக்கு நடிகர் ஜெயம்ரவி - இயக்குனர் மோகன் ராஜா நிதியுதவி

    கொரோனாவை எதிர்கொள்ள முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு திரைப்பிரபலங்கள் பலரும் நிதி உதவி வழங்கி வருகின்றனர்.
    தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக நிதி தேவைப்படுவதால் நன்கொடை வழங்குமாறு தமிழக முதல் அமைச்சர் முக ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து திரைப்பிரபலங்கள் பலரும் முதல்வரை நேரில் சந்தித்தும், ஆன்லைன் மூலமாகவும் நிதியுதவி அளித்து வருகின்றனர். 

    முன்னதாக நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் ரூபாய் 1 கோடி, இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் அஜித், உதயநிதி ஸ்டாலின், சிவகார்த்திகேயன் ஆகியோர் தலா 25 லட்சம் ரூபாய், இயக்குனர்கள் ஷங்கர், வெற்றிமாறன் ஆகியோர் தலா ரூ.10 லட்சம் வழங்கி இருந்தனர். 

    ஜெயம்ரவி

    இந்நிலையில், எடிட்டர் மோகன், அவரது மகன்களான நடிகர் ஜெயம்ரவி, இயக்குனர் மோகன் ராஜா ஆகியோர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்தனர்.
    Next Story
    ×