search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    கார்த்தி பகிர்ந்த புகைப்படம்
    X
    கார்த்தி பகிர்ந்த புகைப்படம்

    கல்லூரி நண்பர்களுடன் அரசு பேருந்தில் அரட்டை - மலரும் நினைவுகளை பகிர்ந்த கார்த்தி

    நடிகர் கார்த்தி தனது சமூக வலைதள பக்கத்தில், தான் நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
    நடிகர் சிவகுமாரின் மகனும் சூர்யாவின் தம்பியுமான கார்த்தி, முதலில் இயக்குனர் மணிரத்னத்திடம் ஆயுத எழுத்து படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார். பின்னர் பருத்திவீரன் பட வாய்ப்பு கிடைத்ததும் நடிகரானார். பின்னர் தொடர்ந்து பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகரான கார்த்தி, தற்போது மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வனில் நடித்து வருகிறார்.

    கார்த்தி

    இந்நிலையில், நடிகர் கார்த்தி தனது சமூக வலைதள பக்கத்தில், தான் நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். அதில் அவர் “சென்னை மக்களின் நம்பகமான நண்பன் பல்லவன். என் கல்லூரி நாட்களில் அதிகம் பல்லவன் பேருந்தில் தான் செலவழித்திருக்கிறேன்” என்று நினைவுகளை பகிர்ந்துள்ளார். கார்த்தியின் இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது. 
    Next Story
    ×