என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
கே.ஜி.எப் இயக்குனரின் பிரம்மாண்ட படத்தில் இணைந்த சுருதிஹாசன்
Byமாலை மலர்28 Jan 2021 5:30 AM GMT (Updated: 28 Jan 2021 5:30 AM GMT)
கே.ஜி.எப் இயக்குனர் பிரசாந்த் நீல், அடுத்ததாக இயக்கும் பிரம்மாண்ட படத்தில் ஹீரோயினாக நடிக்க நடிகை சுருதிஹாசன் ஒப்பந்தமாகி உள்ளார்.
கே.ஜி.எப் படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் பிரசாந்த் நீல். இவர் அடுத்ததாக பாகுபலி நடிகர் பிரபாஸை வைத்து ‘சலார்’ என்ற படத்தை இயக்க உள்ளார். தெலுங்கில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகும் இப்படத்தை தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டுள்ளனர். இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவி வந்தது.
இந்நிலையில், சலார் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்க சுருதிஹாசன் ஒப்பந்தமாகி உள்ளார். சுருதிஹாசனின் பிறந்தநாளான இன்று இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. தென்னிந்திய அளவில் மட்டுமல்லாது இந்திய அளவிலும் சுருதிஹாசன் புகழ் பெற்ற நடிகையாக இருப்பதால் அவரை இப்படத்தில் ஒப்பந்தம் செய்துள்ளார்களாம். இதன்மூலம் நடிகை சுருதிஹாசன், பிரபாஸுடன் முதன்முறையாக இணைந்து நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X