என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
பிக்பாஸ் பட்டத்தை ஆரி வெல்வார் - முன்னாள் போட்டியாளர் கணிப்பு
Byமாலை மலர்5 Jan 2021 3:12 PM GMT (Updated: 5 Jan 2021 3:12 PM GMT)
தற்போது நடைபெற்றுவரும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் டைட்டிலை ஆரி வெல்வார் என்று முன்னாள் போட்டியாளர் கூறியிருக்கிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4 வது சீசன் அக்டோபர் 4ந்தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தமுறை 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் கடந்த வாரம் 90 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்த ஆஜித் குறைந்த வாக்குகளைப் பெற்று 11-வது போட்டியாளராக வெளியேற்றப்பட்டுள்ளார்.
இந்த வாரம் முழுக்க ஆரி - பாலாஜி இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியதை அடுத்து போட்டியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன் பாலாஜியின் தவறுகளை சுட்டிக்காட்டினார். அதே வேளையில் சக போட்டியாளர்கள் வைக்கும் சிறு சிறு விஷயங்களை திருத்திக் கொள்ளலாமே என்றும் ஆரிக்கு அறிவுரை வழங்கினார்.
ஆரி - பாலாஜி இருவரிடையேயான மோதலைப் பார்த்த பார்வையாளர்கள் சிலர் ஆரிக்கு ஆதரவாகவும், ஒரு சிலர் பாலாஜிக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்திருந்த நிலையில், முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரும் நடிகையுமான ரேஷ்மா பசுபுலெட்டி தான் ஆரிக்கு ஆதரவாக இருப்பதாகவும், அவர் டைட்டிலை வெல்வார் என்றும் கூறியுள்ளார். நடிகை ரேஷ்மா, சிலுக்குவார்பட்டி சிங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X