search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    செல்வராகவன்
    X
    செல்வராகவன்

    ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் எடுப்பேன் - செல்வராகவன்

    தமிழ் திரையுலகில் தனித்துவமான படங்களை எடுக்கும் செல்வராகவன், ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் எடுப்பேன் என தெரிவித்துள்ளார்.
    12-ம் நூற்றாண்டின் சோழ பின்னணியைக் கொண்டு தமிழில் எடுக்கப்பட்ட படம் ஆயிரத்தில் ஒருவன். கார்த்தி, ரீமாசென், ஆண்ட்ரியா, பார்த்திபன் நடித்த இந்த படத்தை செல்வராகவன் இயக்கினார். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். 2010-ஆம் ஆண்டு வெளியான இந்த படம் தமிழ் சினிமாவின் முக்கியமான முயற்சியாக அப்போது பார்க்கப்பட்டது. தமிழில் ஒரு புதிய கதைக் களத்தைப் படைத்த செல்வராகவன் குழுவுக்கு பாராட்டுகள் குவிந்தன. 

    ஆயிரத்தில் ஒருவன் போஸ்டர், செல்வராகவன்

    10 ஆண்டுகளுக்கு பின் தற்போது, ஆயிரத்தில் ஒருவன் படத்தை ரீ-ரிலீஸ் செய்துள்ளனர். நேற்று (டிச.31-ந் தேதி) தமிழகமெங்கும் தியேட்டர்களில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட இப்படத்திற்கு தற்போதும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஏராளமான ரசிகர்கள் செல்வராகவனிடம் ஆயிரத்தில் ஒருவன் 2-ம் பாகம் எடுக்குமாறு டுவிட்டரில் வேண்டுகோள் விடுத்தனர். இதற்கு பதிலளித்த செல்வராகவன், ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் எடுப்பேன் என தெரிவித்து உள்ளார்.
    Next Story
    ×