search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    ரஜினி
    X
    ரஜினி

    கடவுளின் ஆசிர்வாதங்களை பெற்று ரஜினி விரைவில் குணமடைவார் - பிரபல நடிகர் அறிக்கை

    கடவுளின் ஆசிர்வாதங்களை பெற்று ரஜினி விரைவில் குணமடைவார் என்று பிரபல நடிகர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
    சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வந்தது. அதில் பணியாற்றிய டெக்னீஷியன்கள் 4 பேருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்ததையடுத்து, படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதையடுத்து நடிகர் ரஜினிகாந்துக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா இல்லை என தெரியவந்தது.

    இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா குறித்து எந்த அறிகுறியும் ரஜினிகாந்திற்கு இல்லை. ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று கூறியது.

    இந்நிலையில், தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் பவன் கல்யாண் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், பிரபல நடிகர் சூப்பர் ஸ்டார் திரு.ரஜினிகாந்த் உடல்நலக் குறைவால் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற செய்தியை அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தேன்.

    பவன் கல்யாண்

    அவருக்கு கொரோனா அறிகுறிகள் இல்லை என்று மருத்துவர்கள் அறிவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. திரு.ரஜினிகாந்த் அவர்கள் நிறைந்த தைரியமுள்ளவர், அது மட்டுமல்லாது ஆன்மீகம் உள்ளவர். கடவுளின் ஆசிர்வாதங்களை பெற்று விரைவில் குணமடைவார். அவர் வணங்கும் மாகாவதார் பாபாஜியின் ஆசீர்வாதங்களை பெற்று அவர் முழுமையான ஆரோக்கியத்துடன் நம் முன் வரவேண்டும் என்று நான் விரும்புகிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×