search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    ரஜினிகாந்த்
    X
    ரஜினிகாந்த்

    4 பேருக்கு மட்டுமே கொரோனா... அண்ணாத்த படக்குழு அறிவிப்பு

    கொரோனா தொற்று ஏற்பட்டதால் அண்ணாத்த படப்பிடிப்பு நிறுத்தப்பட்ட நிலையில், படக்குழுவினர் 4 பேருக்கு மட்டுமே கொரோனா என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
    ரஜினி நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் அண்ணாத்த. அடுத்த மாதம் ரஜினி தனி கட்சி தொடங்க இருப்பதால் படப்பிடிப்பை விரைவாக முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டனர்.

    இதையடுத்து கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு 9 மாதங்களுக்கு பிறகு கடந்த டிசம்பர் 14-ந் தேதி ஐதராபாத்தில் மீண்டும் தொடங்கி நடந்து வந்தது. இதில் ரஜினி, குஷ்பு, நயன்தாரா, மீனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    சன் பிக்சர்ஸ் நிறுவனம்

    இந்நிலையில், படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் 4 பேருக்கு மட்டுமே கொரோனா, ரஜினி மற்றும் இதர படக்குழுவினருக்கு கொரோனா தொற்று இல்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். மேலும் அண்ணாத்த படத்தின் ஷூட்டிங் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என்றும் கூறியிருக்கிறார்கள்.
    Next Story
    ×