search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    கதிர், ஆனந்தி
    X
    கதிர், ஆனந்தி

    மீண்டும் இணையும் ‘பரியேறும் பெருமாள்’ ஜோடி?

    பரியேறும் பெருமாள் படத்தில் ஜோடியாக நடித்த கதிர் - ஆனந்தி, விரைவில் புதிய படத்தில் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளார்களாம்.
    அட்டக்கத்தி, மெட்ராஸ், காலா, கபாலி என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் பா.இரஞ்சித். இவர் தயாரிப்பாளராக அறிமுகமான படம் ‘பரியேறும் பெருமாள்’. மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. பல்வேறு விருதுகளையும் வென்றது.

    இதில் கதிர் நாயகனாகவும், ஆனந்தி நாயகியாகவும் நடித்திருந்தார்கள். இப்படத்தில் இவர்களின் நடிப்பு பெரிதும் பாரட்டப்பட்டது. இருவருக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி இருந்தது படத்திற்கு பலமாக அமைந்தது.

    ஆனந்தி, கதிர்

    இந்நிலையில், அவர்கள் இருவரும் மீண்டும் ஒரு புதிய படத்தில் ஜோடியாக நடிக்க உள்ளார்களாம். இப்படத்தை இளம் இயக்குனர் ஒருவர் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
    Next Story
    ×