search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    சிம்பு
    X
    சிம்பு

    சிம்புவின் சினேக் சர்ச்சை... முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் சுசீந்திரன்

    படப்பிடிப்பு தளத்தில் சிம்பு பாம்பு பிடித்தது சர்ச்சையான நிலையில், இயக்குனர் சுசீந்திரன் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
    ஈஸ்வரன் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் சிம்பு பாம்பு பிடித்தது போன்ற காட்சி சமீபத்தில் வெளியானது. அந்த வீடியோ வைரலாகப் பரவிய, அதே வேளையில், சமூக ஆர்வலர் ஒருவர் வனத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், அந்தக் காட்சி போலியான பிளாஸ்டிக் பாம்பை வைத்து படமாக்கியதாக அப்படத்தின் இயக்குனர் சுசீந்தீரன் விளக்கம் அளித்துள்ளார். மேலும், இந்தக் காட்சியைப் பற்றிய செய்தியையும், புகைப்படத்தையும் தயாரிப்பு நிறுவனம் சார்பாக அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை என்றும், கம்பியூட்டர் கிராபிக்ஸ் செய்யும் போது, கசிந்த காட்சிகள் குறித்து விசாரித்து வருவதகாவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    சுசீந்தீரன்

    இதனிடையே, வனத்துறை அதிகாரிகள் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து, தங்கள் தரப்பு விளக்கத்தை தெளிவுப்படுத்தி உள்ளதாக சுசீந்தீரன் தெரிவித்து உள்ளார்.
    Next Story
    ×