என் மலர்
சினிமா

சிம்பு - தனுஷ்
மீண்டும் அழைக்காதீர்கள்... சிம்பு, தனுஷ் பட நடிகை வேண்டுகோள்
தமிழில் சிம்பு மற்றும் தனுஷுடன் ஜோடியாக நடித்த நடிகை, சமூக வலைத்தள பக்கத்தில் மீண்டும் அழைக்காதீர்கள் என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நடிகை ரிச்சா கங்கோபத்தியா தெலுங்கில் ‘லீடர்’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தமிழில் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘மயக்கம் என்ன’ படத்தில் அறிமுகமானார். அந்த படத்தில் இவரது வலிமையான கதாபாத்திரம் அனைவராலும் பாராட்டப்பட்டது. அதையடுத்து சிம்புவுடன் ‘ஒஸ்தி’ படத்தில் நடித்தார். ரிச்சா கடைசியாக 2013-ம் ஆண்டு ‘பாய்’ என்ற தெலுங்கு படத்தில் நடித்தார். அதையடுத்து தற்போது வரை அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை. சமூக வலைத்தளங்களில் தான் ஏன் சினிமாவில் தொடர்ந்து நடிக்கவில்லை என்று கேட்டுவருவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவ்வாறு கேட்பவர்களுக்கு பதிலளித்து பதிவிட்டுள்ளார்.
’எனது ரசிகர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. 8 வருடங்களுக்கு முன்பு நடிப்பை விட்டு விலகிய ஒருவரிடம் தொடர்ந்து ஒரு கற்பனை உலகில் வாழ சொல்கிறார்கள். என்னுடைய வாழ்க்கையில் உண்மையான அக்கறை இல்லாமல் என்னுடைய படத்தைப் பற்றிப் பேசுவது, என்னுடைய புகைப்படங்களைப் பகிர்வது போன்றவற்றைச் செய்து வருகிறார்கள். ஆனால் உங்கள் பொழுதுபோக்கு தேவைகளுக்காக என்னை பயன்படுத்த நீங்கள் ஆர்வமாக இருந்தால், என் எண்ணங்கள், மதிப்புகள் அல்லது எனது 5 வருட திரைப்பட வாழ்க்கைக்கு அப்பாற்பட்ட ஒரு நபராக நான் யார் என்பதைப் பற்றி உண்மையில் நீங்கள் தெரிந்திருக்கவில்லை என்றால், உங்களுக்கு எந்த பயனும் இல்லை.

உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள். 34 வயதான பெண்ணிடம் மரியாதையுடன் ஈடுபடுகிறவர்களை நான் பாராட்டுகிறேன், அவளுடைய தேர்ந்தெடுக்கப்பட்ட வாழ்க்கை அனுபவங்களிலிருந்து சில ஞானத்தைப் பெற்றவள் மற்றும் பல முறை வாழ்க்கையை மாற்றியமைத்தவள், அவளுடைய நோக்கத்தை நிறைவேற்றுவதற்கான தேடலில் ஈடுபட்ட ஒரு பெண்ணுக்கு 34 ஆண்டுகளில் கிடைக்காதது வெறும் 5 வருடத்தில் மட்டும் கிடைத்த சினிமாவைக் கொண்டு வரையறுக்க முடியாது.
தொடர்ந்து என்னை ஊக்கப்படுத்தியவர்களுக்கும், என் வாழ்க்கை பயணத்தால் ஈர்க்கப்பட்டவர்களுக்கும் நன்றி. அவர்கள் தேவைகளுக்காக என்னை நாடுவோர்களை விட எனக்கென்று சில கருத்துக்கள் உள்ளன, எனக்கு மதிப்புகள் உள்ளன, அதுவே எனக்கு முக்கியம். ஆகவே, ஒரு சாதாரண நபராக நீங்கள் என்னை மதித்தால் மட்டுமே உங்களால் எனக்கு மகிழ்ச்சி” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story






