search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    கார்த்தி, ரஞ்சனி
    X
    கார்த்தி, ரஞ்சனி

    மீண்டும் அப்பாவாகிறார் கார்த்தி

    நடிகர் கார்த்தி மீண்டும் அப்பாவாகப்போகும் செய்தி அறிந்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
    நடிகர் கார்த்தி பருத்திவீரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படத்திலேயே முத்திரை பதித்த அவர், தொடர்ந்து பையா, தீரன் அதிகாரம் ஒன்று, கைதி, மெட்ராஸ் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகராக உயர்ந்தார். இவர் கடந்த 2011-ம் ஆண்டு ரஞ்சனி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். 

    குழந்தையுடன் கார்த்தி, ரஞ்சனி தம்பதி

    இந்த தம்பதிக்கு கடந்த 2013ம் ஆண்டு உமையாள் என்ற பெண் குழந்தை பிறந்தது. அதையடுத்து சுமார் 7 ஆண்டுகள் கழித்து தற்போது கார்த்தியின் மனைவி ரஞ்சனி மீண்டும் கர்ப்பமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை அறிந்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கார்த்தி-ரஞ்சனி தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். 
    Next Story
    ×