என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
சஞ்சய் தத்தின் திடீர் அறிவிப்பால் ‘கே.ஜி.எப் 2’ படத்துக்கு சிக்கல்
Byமாலை மலர்14 Aug 2020 6:59 AM GMT (Updated: 14 Aug 2020 6:59 AM GMT)
சஞ்சய் தத்தின் திடீர் அறிவிப்பால், பிரஷாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கே.ஜி.எப் 2’ படத்தின் படப்பிடிப்பை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான கன்னடப் படம் 'கே.ஜி.எப்' . யஷ் நாயகனாக நடித்திருந்த இந்தப் படம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு, வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. பிரஷாந்த் நீல் இயக்கிய இந்த படத்தின் 2-ம் பாகம் தயாரிப்பில் இருக்கிறது. 2-ம் பாகத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் வில்லனாக நடித்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தலால் இதன் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இன்னும், 2 சண்டைக் காட்சிகளைப் படமாக்க வேண்டியுள்ளது. அதில் சஞ்சய் தத் இடம்பெறும் பிரம்மாண்ட சண்டைக்காட்சியும் ஒன்று. தற்போது சஞ்சய் தத், மருத்துவ சிகிச்சைக்காக திரையுலகிலிருந்து சில காலம் விலகுவதாக அறிவித்துள்ளதால், கே.ஜி.எப் 2 படப்பிடிப்பை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சஞ்சய் தத் சிகிச்சை முடிந்து வரும் வரை படக்குழு காத்திருப்பார்களா அல்லது டூப் வைத்து சண்டை காட்சிகளை படமாக்குவார்களா என்பது விரைவில் தெரியவரும். இதனால் படம் திட்டமிட்டபடி அக்டோபர் 23-ந் தேதி ரிலீசாகுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X